வேதாரண்யேஸ்வரர் கோயிலில் தெப்ப திருவிழா

நாகை, மார்ச் 2: நாகை மாவட்டம் வேதாரண்யம் வேதாரண்யேஸ்வர சுவாமி கோயிலில் மாசிமக பெருவிழா கடந்த மாதம் 5ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று முன்தினம் இரவு மணிகர்ணிகை தீர்த்தத்தில் தெப்ப உற்சவம் நடந்தது. வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் கல்யாணசுந்தரேஸ்வரர் எழுந்தருளினார். இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

Related Stories: