வேதாரண்யத்தில் வளர்ச்சி திட்ட பணிகள் ஆய்வு

வேதாரண்யம், மார்ச் 2: வேதாரண்யம் பகுதியில் ஒருங்கிணைந்த நகர்ப்புற வளர்ச்சி திட்ட பணிகளை நகராட்சி நிர்வாக மண்டல செயற்பொறியாளர் பார்த்திபன் ஆய்வு செய்தார். அதன்படி வேதாரண்யம் சன்னதி கடற்கரை சாலை முடிவில் ரூ.70 லட்சத்தில் பக்தர்கள் தங்களது இறந்த மூதாதையர்களுக்கு திதி தர்ப்பணம் செய்து கொடுக்கும் வகையில் கட்டப்பட்டு வரும் தர்ப்பண மண்டப கட்டுமான பணிகளை ஆய்வு செய்தார். அப்போது பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதைதொடர்ந்து நகராட்சி அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் ஆணையர் மகேஸ்வரி, பொறியாளர் பிரதான் பாபு உட்பட அதிகாரிகளிடம் நகராட்சி பகுதியில் நடந்து வரும் பணிகள் குறித்து கேட்டறிந்து விரைந்து முடிக்க உத்தரவிட்டார்.

Related Stories: