பாட்டவயல் சோதனைச்சாவடி பகுதியில் பேருந்து நிறுத்துவதற்கு இடவசதி ஏற்படுத்த கோரிக்கை

பந்தலூர், மே 13: பந்தலூர் அருகே தமிழக கேரளா எல்லைப்பகுதியான பாட்டவயல் போலீஸ் சோதனைச்சாவடி அமைந்துள்ளது. இப்பகுதிக்கு இரு மாநில அரசு மற்றும் தனியார் பேருந்துகள், கூடலூரில் இருந்து பந்தலூர், முக்கட்டி வழியாக சுல்த்தான்பத்தேரி செல்லும் அரசு பேருந்துகள், கேரளா மாநிலம் சுல்த்தான்பத்தேரியில் இருந்து பாட்டவயல் மற்றும் கூடலூர், ஊட்டி உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் அரசு மற்றும் தனியார் பாட்டவயல் சோதனைச்சாவடி பகுதியில் நிறுத்தியும் சில பேருந்துகள் அங்கிருந்து திருப்பியும் செல்கிறது.

இப்பகுதியில் சாலை குறுகலாகவும் போதிய இடவசதி இல்லாமல் இருப்பதால் அடிக்கடி வாகன நெரிசல் மற்றும் போக்குவரத்து பாதிப்பு, விபத்து ஏற்படுகின்றது. எனவே, நெடுஞ்சாலை துறையினர் மற்றும் மாவட்ட நிர்வாகம் இந்த பகுதியில் சாலையை அகலப்படுத்தி இரண்டு மாநில பேருந்துகள் நிற்கவும், திரும்பவும் இடவதி ஏற்படுத்தி தரவேண்டும் என பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

Related Stories: