பாலக்காடு, மே 12: பாலக்காடு மாவட்டம் ஒத்தப்பாலம் பகுதியில் இளம்பெண் மர்ம மரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே பொத்தநாயகன்பாளையத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணவேணி (25). இவரின் கணவர் மணிகண்டன் (35). இவர்கள் திருமணம் முடிந்து கடந்த 10 ஆண்டுகளாக பாலக்காடு மாவட்டம் ஒத்தப்பாலம், ஷொர்ணூர் ஆகிய இடங்களில் வாடகை வீட்டில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் மணிகண்டன் அடிக்கடி மதுக்குடித்துவிட்டு வந்து மனைவியிடம் ரகளையில் ஈடுபட்டு வந்துள்ளார். இதனைத்தொடர்ந்து நேற்று கிருஷ்ணவேணி மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். தொடர்ந்து தகவலறிந்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவ இடத்தை ஷொர்ணூர் டி.எஸ்.பி இப்ரஹாம் தலைமையிலான போலீஸ் குழுவினர் ஆய்வு செய்து பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
