வாலிபரை மிரட்டி பணம், நகை பறித்த 2 பெண்கள் உட்பட மசாஜ் சென்டர் உரிமையாளர் கைது

 

பாலக்காடு, மே 12: கேரள மாநிலத்தில் மலப்புரம் மாவட்டத்தில் திரூர், ஷொர்ணூர், பட்டாம்பி, ஒத்தப்பாலம் ஆகிய இடங்களில் இளம்பெண்களை வைத்து மசாஜ் சென்டர்கள் நடத்தி வருகின்றனர். இந்நிலைகளில் மலப்புரம் மாவட்டம் திரூர் அடுத்த எற்றிரிக்கடவு பகுதியில் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த சவுது (36) என்பவர் 2 பெண்களை வைத்து மசாஜ் சென்டர் நடத்தி வருகிறார்.
இந்நிலையில் அவர் அங்கு வரும் வாலிபர்களின் புகைப்படங்களை எடுத்து மிரட்டி பணம் மற்றும் நகைகள் அபகரித்து வருவதாக புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக மனோஜ் என்ற வாலிபர் திரூர் காவல்நிலையத்தில் புகார் மனு அளித்துள்ளார். இதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் சவுது மற்றும் இரண்டு இளம்பெண்களை கைது செய்து மனோஜிடமிருந்து பறித்த 28 ஆயிரத்து 500 ரூபாய், ஒன்றரை பவுன் தங்கச்சங்கிலி மற்றும் அவரது பைக் ஆகியவற்றை பறிமுதல் செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories: