மரத்தில் லாரி மோதி ஓட்டுநர் பலி

திருபுவனை, மார்ச் 1:  வில்லியனூர் அருகே அரியூர் பாரதி நகர் பகுதியை சேர்ந்தவர் சுதா (எ) சுதேந்திரன் (40). இவர் சொந்தமாக லாரி வாங்கி ஓட்டி வருகிறார். இவருக்கு  மணிமேகலை என்ற மனைவியும், பவன் என்ற மகனும், ஸ்டான்லி என்ற மகளும் உள்ளனர். இந்நிலையில் நேற்று முன்தினம் அதிகாலை 3 மணியளவில் திருவக்கரை பகுதியில் இருந்து கருங்கல் ஜல்லி ஏற்றிக்கொண்டு, அரியூருக்கு பக்கிரிப்பாளையம் வழியாக சுதேந்திரன் வந்தார். அப்போது  கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலை ஓரத்தில் இருந்த புளிய மரத்தில் மோதியது. இதில் லாரியை ஓட்டி வந்த சுதேந்திரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த கண்டமங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories: