பாளை சாந்திநகர் குழந்தை இயேசு ஆலய புனிதர்கள் கெபி அர்ச்சிப்பு விழாவில் சிறுவர்களுக்கு உறுதிப்பூசுதல்

நெல்லை, மார்ச் 1: பாளை சாந்திநகர் குழந்தை இயேசு ஆலயத்தில் புனிதர்கள் கெபி அர்ச்சிப்பு விழா மற்றும் உறுதிப்பூசுதல் நிகழ்ச்சி நடந்தது. பாளை சாந்திநகர் குழந்தை இயேசு ஆலயத்தில் புனிதர்கள் கெபி அர்ச்சிப்பு  விழா மற்றும் உறுதிப்பூசுதல் நிகழ்ச்சி நடந்தது. பங்குத்தந்தை ஞானப்பிரகாசம் முன்னிலை வகித்தார்.  இதில் புனித மிக்கேல் அதிதூதர், வின்சென்ட் தே பவுல், அல்போன்சா, அந்தோனியார் ஆகியோரின் கெபி அர்ச்சிப்பு விழா நடந்தது. இதில் 107 சிறுவர், சிறுமிகளுக்கு உறுதிப்பூசுதல் நடந்தது. கெபியை மறை மாவட்ட முதன்மை குரு குழந்தைராஜ் அடிகள் திறந்து வைத்தார். கெபி அர்ச்சிப்பை பாளை மறை மாவட்ட ஆயர் அந்தோனிசாமி செய்துவைத்தார். இதில் அருட்தந்தையர்கள் மறை மாவட்ட பொருளாளர் அந்தோனிசாமி, மேய்ப்பு பணி இயக்குநர் விசுவாச ஆரோக்கியராஜ், ஆயரின் செயலாளர் சுந்தர், தீபக், தேவராஜன், சேவியர், லூர்துராஜ் அடிகள், பங்கு நிதிக்குழு துணைத்தலைவர் வக்கீல் கணேஷ்ராஜ், செயலாளர் பிரபாகர், துணைச்செயலாளர் ஜோஸ்பின் ஆசிரியர், ராணிதாமஸ், பேராசிரியை சாந்தகுமாரி மற்றும் பங்கு இறை மக்கள், அருட் சகோதரிகள் என திரளானோர் பங்கேற்றனர்.

Related Stories: