ஆசிரியர்களின் கோரிக்கைகளுக்கு அரசாங்கம் செவி சாய்க்கவில்லை மாநிலத் தலைவர் வேதனை

காரைக்குடி, மார்ச் 1:  ஆசிரியர்களின் கோரிக்கைகளுக்கு அரசாங்கம் செவி சாய்க்கவில்லை என்று, தமிழக தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில தலைவர் தெரிவித்தார். காரைக்குடியில் தமிழக தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் சாக்கோட்டை வட்டார கிளை தேர்தல் நடந்தது. தேர்தலுக்கு பின்னர் மாநில தலைவர் ஜோசப்சேவியர் கூறுகையில், ‘‘2019ல் நடந்த போராட்டத்தில் சிறை சென்றவர்கள் மீது போடப்பட்ட 17பி.யை ரத்து செய்த அரசுக்கு நன்றி. ஆனால் எதற்காக ஆசிரியர்கள் போராடினார்களோ அதனை இதுவரை அரசு செய்யவில்லை. புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்யவில்லை. இடைநிலை ஆசிரியர்கள் மத்திய அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு இணையாக  ஊதியம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளுக்கு பல ஆண்டுகளாக அரசு செவிசாய்க்கவில்லை. ஜாக்டோ ஜியோ அமைப்பினரை அழைத்து அரசு பேச வேண்டும்’’ என்றார்.

Related Stories: