ஈரோடு, மார்ச் 1: தா.பாண்டியன் மறைவையொட்டி ஈரோட்டில் அனைத்து கட்சியினர் சார்பில் அமைதி ஊர்வலம் நடந்தது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் மறைவையொட்டி அனைத்து கட்சியினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இதில், ஈரோட்டில் அனைத்து கட்சியினர் சார்பில், அமைதி ஊர்வலம் நேற்று மாலை நடந்தது. ஊர்வலத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் திருநாவுக்கரசு தலைமை தாங்கினார்.
அக்கட்சியின் மாநில நிர்வாகி ஸ்டாலின் குணசேகரன் முன்னிலை வகித்தார். ஊர்வலம் ஈரோடு அரசு மருத்துவமனை ரவுண்டானாவில் துவங்கி மேட்டூர் ரோடு, ஸ்வஸ்திக் கார்னர் வழியாக வ.உ.சி. பூங்காவில் நிறைவடைந்தது.