போதையில் கீழே விழுந்தவர் சாவு

திருச்சி, பிப்.26: திருச்சி-மதுரை ரோடு குப்பாங்குளத்தை சேர்ந்தவர் செல்வம் (53). இவர் கடந்த மாதம் 16ம் தேதி குடித்துவிட்டு போதையில் வீட்டுக்கு வந்தவர் வாசலில் தடுமாறி கீழே விழுந்தார். தலையில் பலத்த அடிபட்ட அவரை குடும்பத்தினர் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். சிகிச்சை பலனின்றி நேற்றுமுன்தினம் செல்வம் இறந்தார். புகாரின் பேரில் தில்லைநகர் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: