நாகர்கோவில், பிப்.26: நாகர்கோவிலில் டாஸ்மாக் ஊழியர்கள் பணிநிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். டாஸ்மாக்கில் 18 ஆண்டுகள் தொகுப்பூதிய அடிப்படையில் பணிபுரிந்து வரும் பணியாளர்களின் பணி நிரந்தரம், காலமுறை ஊதியம், அரசுத்துறையில் மாற்றுப்பணி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி குமரி மாவட்ட அனைத்து டாஸ்மாக் தொழிற்சங்கங்களின் கூட்டுக் குழு சார்பில் நாகர்கோவிலில் அண்ணா விளையாட்டு அரங்கம் முன்பு உண்ணாவிரத போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. ஆனால் போலீசார் உண்ணாவிரதத்திற்கு அனுமதி மறுத்தனர்.