மாடித்தோட்டம் அமைப்பது எப்படி?

தேவதானப்பட்டி, பிப். 26: பெரியகுளம் அருகே, தாமரைக்குளத்தில் பொதுமக்களுக்கு மாடித்தோட்டம்  அமைப்பது குறித்து, தோட்டக்கலை மாணவர்கள் செயல் விளக்கம் அளித்தனர். விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் கலசலிங்கம் தோட்டக்கலைக் கல்லூரி இறுதியாண்டு மாணவர்கள், பெரியகுளம் தாமரைக்குளத்தில் கிராம தங்கல் திட்டம் மூலம் தங்கி, விவசாயிகளுடன் இணைந்து பயிற்சி மற்றும் விவசாயக் கருத்தரங்கு முகாம்களை நடத்தி வருகின்றனர்.    அங்குள்ள பொதுமக்களுக்கு இயற்கை முறையில் மாடித்தோட்டம் அமைப்பது குறித்து செயல் விளக்கம் அளித்தனர். இந்த மாடித்தோட்ட அமைப்பது குறித்து செயல் விளக்கத்தில் கல்லூரி உதவி பேராசிரியர் கண்ணபிரான் முன்னிலை வகித்தனர். தோட்டக்கலை இறுதியாண்டு மாணவர்கள் ஜெயராமன், சங்கீத்குமார், கிருஷ்ணகாந்த், ராகுல் கிருஷ்ணன், தேவராஜ், கார்த்திக், தினேஷ்பாபு, கௌதம், குருவிஷ்ணு ஆகியோர் செய்தனர்.

Related Stories: