திருச்சி, பிப்.25: ரங்கம் ரங்கநாதர்கோயிலில் உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டதில் ரூ 71.50 லட்சம் ரொக்கம், 398 கிராம் தங்கம் காணிக்கை கணக்கிடப்பட்டது. கொரோனா தொற்று காரணமாக கடந்தாண்டு மார்ச் 25ம் தேதி முதல் நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனால் கோயில்களும் அடைக்கப்பட்டிருந்தது. ஊரடங்கு தளர்வையொட்டி, கடந்த ஜூன் 1ம் தேதி கோயில்கள் திறக்கப்பட்டது. அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இதில் ரங்கம் கோயிலில் கடந்த மாதம் 25ம் தேதி சொர்க்கவாசல் திறப்பு சிறப்பாக நடைபெற்றது. இந்நிலையில் ரங்கம் கோயிலில் உள்ள உண்டியல்கள் நேற்று திறக்கப்பட்டு கருடமண்டபத்தில் கோயில் இணை ஆணையர் மாரிமுத்து முன்னிலையில் அரசின் வழிகாட்டுதலின்படி காணிக்கை கணக்கிடப்பட்டது.