கறம்பக்குடி, பிப்.24: பிரதமர் மோடி அவரவர் வங்கி ரூ.2 ஆயிரம் வரவு வைக்கப்போவதாக வதந்தி பரவியதால், கறம்பக்குடி தாலுகா அலுவலகத்தில் ஆதார் எண்ணை பதிய மக்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி தாலுகா அலுவலகத்தில் கடந்த இரண்டு மூன்று நாட்களாக ஆதார் கார்டு பதிவதற்கு கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது இதனையடுத்து நேற்று காலை 8 மணியிலிருந்து தாலுகா அலுவலகம் முன் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் டோக்கன் வாங்குவதற்காக வரிசையில் நின்றனர். கூட்ட நெரிசல் காரணமாக அங்கு இருந்தவர்கள் உடனே காவல் துறைக்கு தகவல் கொடுத்தனர். உடனே இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியன் தலைமையில் போலீசார் கூட்டத்தை களைத்தனர். அப்போது பொதுமக்கள் கூறுகையில், பிரதமர் மோடி ரூ.2 ஆயிரம் வங்கி கணக்கில் செலுத்த போகிறார் என்று சிலர் கூறியதால், போன் நம்பர் மற்றும் ஆதார் கார்டில் பதிய போகிறோம் என்று கூறியுள்ளனர்.