ஈரோடு, பிப். 24: ஈரோட்டில் உள்ள தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கத்தில் ‘பொருளாதார நெருக்கடியும், அதற்கான தீர்வுகளும்’ என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் சங்கரன் தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் பாலசுப்பிரமணியன் வரவேற்றார்.
நிர்வாகிகள் ஹரிதாஸ், பாரதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க முன்னாள் மாநில தலைவர் ராஜ்குமார் ‘பொருளாதார நெருக்கடியும், அதற்கான தீர்வுகளும் என்ற தலைப்பில் பேசியதாவது: படித்தவர்களுக்கு அதற்கான வேலை கிடைப்பதில்லை. பொதுத்துறை நிறுவனங்கள் தனியார் மயமாவதும், மூடப்படுவதும், வேலை இன்மையை அதிகரிக்கிறது.