குடிசைமாற்று வாரிய குடியிருப்பில் வீடுகள் ஒதுக்க வேண்டும் பட்டா வழங்கியும் உட்பிரிவு செய்யப்படாததால் தவிப்பு

திருச்சி பேரூர் அக்ரஹார பொதுமக்கள் அளித்த மனுவில்: திருச்சி பேரூர் அக்ரஹாரம் பகுதியில் உள்ள ஆதிதிராவிட பொதுமக்களுக்கு 1986-1997 வரை பகுதி பகுதியாக 150 பேருக்கு வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது. அந்த இடத்தினை தகுந்த உட்பிரிவு செய்து வழங்–்கிட வேண்டி பலமுறை மனு கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில பட்டா மனைகளை ஆக்கிரமித்து ஊராட்சி மன்றத்தின் விளையாட்டு மைதானம் அமைப்பதற்கு முயற்சித்து வருகின்றனர். இதனை தடுப்பதுடன், தகுந்த உட்பிரிவு செய்து பயனாளிகளுக்கு பட்டா வழங்க வேண்டும் என மனுவில் கூறியுள்ளனர்.

Related Stories: