திருவள்ளுவரை புரோகிதர் போல் சித்தரிப்பதா? இந்திய மாணவர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம்

தஞ்சை, பிப்.23: திருவள்ளுவரை புரோகிதர் போல் சித்தரித்து இந்து மதத்திற்குள் புகுத்தி வரலாற்றை மாற்ற துடிக்கும் மத்திய அரசை கண்டித்து தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம் முன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்திய மாணவர் சங்கம் சார்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய மாணவர் சங்க மாவட்ட செயலாளர் அரவிந்த்சாமி தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான மாணவ, மாணவிகள் கலந்து கண்டு மத்திய அரசை கண்டித்து கோஷமிட்டனர்.

Related Stories: