15 பேருக்கு கொரோனா

ஈரோடு, பிப். 21: ஈரோடு மாவட்டத்தில் நேற்று 15 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால், மாவட்டத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 14,705 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 12பேர் நேற்று குணமடைந்து வீடு திரும்பினர். இதன் காரணமாக இதுவரை மொத்தம் 14,423 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் புதியதாக கொரோனா பாதிக்கப்பட்டவர்களுடன் சேர்த்து 132 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா தொற்றால் சிகிச்சை பலனின்றி இதுவரை 150 பேர் உயிரிழந்துள்ளனர்.

Related Stories: