ஈரோடு, ஏப்.10: ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் உள்ள சுப்பிரமணியசாமி கோயிலில் நேற்று உண்டியல்கள் திறந்து எண்ணும் பணி நடைபெற்றது. பவானி சங்கமேஸ்வரர் கோயில் உதவி ஆணையர் அருள்குமார், சென்னிமலை அறங்காவலர் குழு தலைவர் பழனிவேல், செயல் அலுவலர் சரவணன், கோயில் ஆய்வாளர் மாணிக்கம் ஆகியோர் முன்னிலையில் உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டது. இதில், கோயில் உண்டியலில் ரூ.41,41,96 பணமும், 70.200 கிராம் தங்கம் மற்றும் 1,570 கிராம் வெள்ளி ஆகியவை பக்தர்களின் காணிக்கையாக இருந்தது.
அதேபோல், திருப்பணி உண்டியலில் ரூ.82,213 காணிக்கையாக இருந்தது. இரு உண்டியல்களிலும் சேர்த்து மொத்தம் ரூ.42 லட்சத்து 23 ஆயிரத்து 309 பக்தர்களின் காணிக்கையாக இருந்தது. உண்டியல்கள் எண்ணும் பணியில் அறங்காவலர் குழு உறுப்பினர்கள் மனோகரன், பாலசுப்பிரமணியம், அந்தியூர் சரக கோயில் ஆய்வாளர் சிவமணி மற்றும் கோயில் பணியாளர்கள், அர்ச்சகர்கள், மத்திய கூட்டுறவு வங்கி பணியாளர்கள், அரச்சலூர் நவரசம் கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
