முதுமலை புலிகள் காப்பகம் பகுதியில் பூத்துக்குலுங்கும் கொன்றை மலர்கள்: சுற்றுலா பயணிகள் கண்டு ரசிப்பு

ஊட்டி: முதுமலை புலிகள் காப்பகம் பகுதிகளில் பூத்துக்குலுங்கும் மஞ்சள் நிற கொன்றை மலர்கள் சுற்றுலா பயணிகளை கவர்ந்து வருகிறது. நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகம் தெப்பகாடு பகுதியில் ஏராளமான கொன்றை மரங்கள் உள்ளன. ஆண்டுதோறும் கோடைகாலமான ஏப்ரல், மே மாதத்தில் இந்த மரங்களில் மஞ்சள் நிறத்தில் பூக்கள் பூத்து காணப்படும்.

தெப்பகாடு பகுதியில் சாலை ஓரங்களில் இருபுறங்களிலும் இந்த மரங்களில் அதிக அளவு மலர்கள் பூத்து காணப்படுவதாலும், அவைகள் தரையில் விழுந்து காணப்படுவது மிகவும் அழகாக காட்சியளித்து வருகிறது. தற்போது முதுமலைக்கு வரும் சுற்றுலாப்பயணிகளும், முதுமலை வழியாக செல்லும் வாகன ஓட்டிகளும் இந்த மலர்களின் அழகை ரசித்து செல்கின்றனர். மேலும் உள்ளூர் மக்களும் இந்த மலர்களை கண்டு ரசித்து செல்கின்றனர் கேரளாவில் சித்திரை கனிக்காக இந்த மலர்களை பொதுமக்கள் அதிகம் பயன்படுத்துவது குறிப்பிடத்தக்கது.

Related Stories: