காவல் துறை சார்பில் பழங்குடியினர் கிராமத்தில் பொங்கல் விழா

கூடலூர், ஜன. 18: மசினகுடி ஊராட்சிக்கு உட்பட்ட பூத நத்தம் பழங்குடியினர் கிராமத்தில் மசினகுடி போலீசார் சார்பில், பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பொங்கல் வைத்து பூஜை செய்து, அனைவருக்கும் பொங்கல் வழங்கப்பட்டது. மீன்குடி இன்ஸ்பெக்டர் திருமலைராஜன், எஸ்.ஐ. ராஜா, எஸ்.எஸ்.ஐ. விஜயன், மகேஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Related Stories: