கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சி அதிமுக கூட்டத்தில் ராஜினாமா கடிதம் வழங்கிவிட்டு நகரச் செயலாளர் பாபு வெளியேறினார். கள்ளக்குறிச்சி அதிமுக வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் அதிமுக நகர செயலாளர் பாபு ராஜினாமா செய்தார். அதிமுகவில் தொடரமுடியாது என கூறி விலகல் கடிதத்தை வழங்கிவிட்டு கண்ணீருடன் பாபு வெளியேறினார். கூட்டத்தில் கள்ளக்குறிச்சி அதிமுக நகர செயலாளர் பாபு ராஜினாமா கடிதத்தை வழங்கிவிட்டு வெளியேறியதால் பரபரப்பு ஏற்பட்டது.
மனவேதனையில் இருப்பதால் தொடர்ந்து நகர செயலாளர் பதவியில் தொடர முடியாது என பாபு ராஜினாமா செய்தார். ராஜினாமா செய்துவிட்டு தரையில் விழுந்து அனைவருக்கும் நன்றி தெரிவித்து பாபு கண்ணீருடன் புறப்பட்டார். 2011 சட்டமன்றத் தேர்தலில் கள்ளக்குறிச்சி தொகுதியில் எல்.எல்.ஏ.வாக வெற்றி பெற்றவர் அழகுவேலு பாபு. கள்ளக்குறிச்சி முன்னாள் எம்.எல்.ஏ. அழகுவேலு பாபு, மாவட்ட மகளிரணி தலைவர் பதவியை ராஜினாமா செய்தார்.
மன உளைச்சலில் உள்ளதால் பதவியில் இருந்தும் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். கள்ளக்குறிச்சி அதிமுக மாவட்டச் செயலாளர் குமரகுருவிடம் கடிதத்தை வழங்கிவிட்டு அழகுவேலு பாபு சென்றார்.
