குடிநீர் விநியோகத்தை சீராக்ககோரி நகராட்சி அதிகாரிகளுடன் பெண்கள் வாக்குவாதம்

விருதுநகர், பிப். 17: விருதுநகர் நகராட்சியில் 2 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட சிவகாமிபுரம் மேல்நிலைத்தொட்டியில் இருந்து அவ்வையார் தெரு, தெற்கு ரதவீதி, மேலரதவீதி பகுதிகளில் 300க்கும் மேற்பட்ட குடியிருப்புகளுக்கு 20 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. ஆனால், ஒவ்வொரு முறையும் குடிநீர் விநியோகம் செய்யப்படும்போது தண்ணீர் சரியாக வருவதில்லை; கடைக்கோடி வீடுகளுக்கு தண்ணீர் போய் சேருவதில்லை. அவ்வையார் தெருவிற்கு மட்டும் தனியாக தண்ணீர் விட வலியுறுத்தி, பல முறை மனு அளித்தும் நடவடிக்கை இல்லை. இதனால், குடிநீர் விநியோகத்தை சீராக்க உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி நகராட்சி அலுவலகத்தில் அதிகாரிகளுடன் பெண்கள் காரசார விவாதம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: