காரைக்குடி, பிப்.17: காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக வரலாற்றுத்துறை வருகை பேராசிரியர் ராஜவேலு, துறைத்தலைவர் சரவணக்குமார் ஆகியோர் தலைமையில் காளையார்கோவில் அருகே இலந்தகரையில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. இந்தியத் தொல்லியல் துறை 2020-2021 கல்வியாண்டில் இப்பகுதியில் அகழாய்வு செய்ய பல்கலைக்கழகத்துக்கு ஒப்புதல் அளித்துள்ளது. இது தொடர்பாக தமிழகத்தொல்லியல்துறையும், அழகப்பா பல்கலைக்கழகமும் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திட்டுள்ளன. இதுகுறித்து துணைவேந்தர் என்.ராஜேந்திரன் கூறுகையில், ‘‘தொல்லியல் ஆர்வலர் ரமேஷ் மூலம் பெறப்பட்ட இலந்தகரை பொருட்களின் மூலம் இப்பகுதி சிறந்த கலாச்சாரம், பண்பாட்டை கொண்டு விளங்கியுள்ளது தெரியவந்துள்ளது. பல்கலைக்கழகங்களில் நடத்தப்படும் அகழாய்வுகளில் இந்திய தொல்லியல் துறை இணைந்து செய்வது இதுவே முதல் முறையாகும். இந்த அகழாய்வில் இந்திய தொல்லியல் துறையில் பணியாற்றும் தொல்லியலாளர் இணை இயக்குநராக செயல்படுவார். இப்பகுதியில் அரிய அரும்பொருட்களும், பண்பாட்டு எச்சங்களும் கிடைக்க வாய்ப்புள்ளது.