திண்டுக்கல், பிப். 17: இணையதள பாதுகாப்பு தினத்தையொட்டி பெற்றோர்கள் குழந்தைகளை கவனித்து கொள்வது குறித்து திண்டுக்கல் மாவட்ட எஸ்பி ரவளிபிரியா பல்வேறு அறிவுரைகளை வழங்கினார். இதுகுறித்து அவர் தெரிவித்ததாவது: கொரோனா காலம் என்பதால் பெரும்பாலும் இணையவழி கல்வியே பயன்பாட்டில் உள்ளது. இதில் குழந்தைகள் எவருக்கும் தெரியமால் நடக்கின்ற குற்றங்களால் பாதிக்கப்படுகின்றனர். எனவே பெற்றோர்கள் தேவையற்ற பதிவுகளை பதிவிறக்கம் செய்ய வேண்டாம். அதோடு வங்கி கணக்கு குறியீட்டு எண், ஏடிஎம். எண்ணை பகிர கூடாது என்றும், அதனால் ஏற்படும் பொருளாதார இழப்பையும் குழந்தைகளுக்கு பெற்றோர் எடுத்து கூற வேண்டும். குழந்தைகள் இணையதள விளையாட்டுகளை விளையாடுவதால் அவர்களின் அறிவு, கல்வி, திறமை, உடல்நலன் பாதிக்கப்படுவது மட்டுமல்லாமல் சில நேரங்களில் உயிருக்கே ஆபத்தான சூழலும் உருவாகி விடுகிறது.