ராமநாதபுரம், பிப்.16: திருவாடானை சட்டமன்ற தொகுதி பாஜ பொறுப்பாளரும், விவசாய அணி மாவட்ட பொறுப்பாளரும், முன்னாள் யூனியன் தலைவருமான குட்லக் ராஜேந்திரன்-மல்லிகா ராஜேந்திரன் ஆகியோரின் மகன் பொறியாளர் ராஜேஷ்-நீலகிரி மாவட்டம் ஊட்டியை சேர்ந்த தரம்சந்த்-நீலாபாய் ஆகியோரின் மகள் ஷ்ரமித்தா திருமண விழா திருவாடானை குட்லக் திருமண மகாலில் நேற்று நடைபெற்றது.
முன்னாள் மத்திய, மாநில அமைச்சர் திருநாவுக்கரசர் எம்பி தலைமை வகித்து திருமணத்தை நடத்தி வைத்தார். முன்னாள் அமைச்சர் நயினார்நாகேந்திரன், மாவட்ட பாஜ தலைவர் முரளிதரன், பாஜ மாநில ஓபிசி அணி துணை தலைவர் சுரேஷ் களஞ்சியம், மாவட்ட பார்வையாளர் குப்புராமு ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் நவாஸ்கனி எம்பி, முன்னாள் அமைச்சர் டாக்டர் மணிகண்டன் எம்எல்ஏ, காங்கிரஸ் முன்னாள் மாவட்ட தலைவர் தெய்வேந்திரன், முன்னாள் அமைச்சர் வது.நடராஜன், திரைப்பட இயக்குநர் அமீர், முன்னாள் மாவட்ட செயலாளர் ஆனிமுத்து, மாவட்ட ஊராட்சி துணை தலைவர் சாயல்குடி வேலுச்சாமி, ராமநாதபுரம் காங்கிரஸ் சட்டமன்ற பொறுப்பாளர் வாலியா முத்துராமலிங்கம், தேமுதிக மாவட்ட தலைவர் சிங்கை ஜின்னா, முன்னாள் திமுக ஒன்றிய செயலாளர் நல்ல சேதுபதி உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.திருவாடானை தொகுதி பாஜ பொறுப்பாளர் குட்லக் ராஜேந்திரன் இல்ல திருமணவிழா எம்பி, எம்எல்ஏ.க்கள், கட்சி பிரமுகர்கள் வாழ்த்து
- தொகுதியில்
- திருவனந்தபுரம்
- பாஜக
- வீட்டில்
- கட்சி
- குட்லக் ராஜேந்திரன்
- பிரமுகர்களும்
- பாராளுமன்ற உறுப்பினர்கள்