திருவாரூர், பிப்.12:திருவாரூர் மாவட்டம் நன்னிலம் தாலுகா பேரளம் அருகே திருக்கொடியலுரில் அகஸ்தீஸ்வரர் கோயில் உள்ளது. இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருந்து வரும் இக்கோயிலில் சனிப்பெயர்ச்சி நாளில் சிறப்பு பூஜைகள் மற்றும் அபிஷேகம் நடைபெறுவது வழக்கம். அதன்படி கடந்த டிச.27ம் தேதி அதிகாலை 5.22 மணிக்கு சனீஸ்வர பகவான் தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்கு பிரவேசிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றதையொட்டி இந்த சனிப்பெயர்ச்சி விழாவில் இக்கோயிலின் அனுகிரஹமூர்த்தியான மங்கள சனீஸ்வர பகவானுக்கு சிறப்பு சனி பரிகார ஹோமமும், அபிஷேகமும் நடைபெற்றது.இதனையொட்டி தொடர்ந்து 48 நாட்களுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று வரும் நிலையில் நாளையுடன் (13ம் தேதி) 48 நாட்கள் முடிவடைவதையொட்டி அன்று சிறப்பு அபிஷேகம் மற்றும் ஹோமம் நடைபெறுகிறது.