வழிப்பறியில் ஈடுபட்ட 2 வாலிபர்கள் கைது

கமுதி, பிப்.11:  கமுதி அருகே வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்ட 2 பேரை போலீசார் கைது செய்தனர். கமுதி அருகே காணிக்கூரில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் கோவில் திருவிழா நடந்தது. இதில் கலந்து விட்டு ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்த கரிசல்புலி ஊரைச் சேர்ந்தவர்களிடம் சிலர் செல்போன்களை திருடிச் சென்றனர். இதுகுறித்து கோவிலாங்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அவர்களில் 6 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது மேலும், தொட்டியாபட்டியைச் சேர்ந்த முனீஸ்வரன் (29), ஆரைகுடியைச் சேர்ந்த வசந்தகுமார்(22) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து டூவீலரும், வாள் ஒன்றும் பறிமுதல் செய்தனர்.

Related Stories: