சீர்காழி, பிப். 11: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே தொழுதூர் கிராமத்தில் இந்திய நெல் ஆராய்ச்சி நிலையம் மற்றும் வேளாண்மை அறிவியல் நிலையம் சார்பில் ஆதிதிராவிடர் துணை திட்டத்தின்கீழ் விவசாயிகளுக்கு ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை முறைகள் குறித்து பயிற்சி முகாம் நடந்தது. தமிழ்நாடு டாக்டர் ஜெ ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழக விரிவாக்க கல்வி இயக்குனர் ராஜ்குமார் தலைமை வகித்தார். வேளாண் அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் கோபாலகண்ணன் முன்னிலை வகித்தார்.