சென்னை: சென்னை பெரும்பாக்கத்தில் செங்கல் லாரி மோதி தாய், மகள் இருவரும் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். மகளை பள்ளிக்கு அழைத்துச் சென்றபோது வேகத்தடையில் பைக் நிலைதடுமாறி விழுந்த நிலையில், லாரி மோதியது. லாரி மோதியதில் தாய் லாவண்யா (35), மகள் இனியா (13) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்; இந்த விபத்து தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
