மானாமதுரையில் ஆகாஷ் என்ற இளைஞரின் காவல் மரணம் தொடர்பான வழக்கு ஐகோர்ட் கிளையில் அவசர விசாரணை

மதுரை: மானாமதுரையில் ஆகாஷ் என்ற இளைஞரின் காவல் மரணம் தொடர்பான வழக்கு உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் அவசர விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. காவல் நிலைய சிசிடிவிகளை பாதுகாப்பது, உடற்கூராய்வு வீடியோ பதிவு ஆகிய மனுதாரரின் கோரிக்கைகள் அரசுத் தரப்பில் ஏற்கப்பட்டுள்ளதால், சாலை மறியல் போராட்டத்தைக் கைவிட நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர். சம்பந்தப்பட்ட நீதித்துறை நடுவர் முன்னிலையில் மதுரை அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் தலைமையில் விரைவாக உடற்கூராய்வு செய்ய உத்தரவிட்டு, விசாரணை நாளை மறுதினத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Related Stories: