நூலக வாசகர் வட்ட ஆலோசனை கூட்டம்

திருப்போரூர்: திருப்போரூர் கிளை நூலகத்தின் வாசகர் வட்ட ஆலோசனை கூட்டம் நடந்தது. தலைவர் விஸ்வநாதன் தலைமை தாங்கினார். இணை செயலாளர் குமார் வரவேற்றார். துணை தலைவர் தனஞ்செழியன் முன்னிலை வகித்தார். இள்ளலூர் மற்றும் மானாம்பதி அரசுப்பள்ளிகளில் 10ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்குவது என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மேலும், சமுதாய நூலக திட்டத்தின் கீழ் தொடங்கப்படும் நூலகங்களுக்கான வைப்புத்தொகை ₹20 ஆயிரத்தை குடியிருப்புவாசிகளிடம் திரட்டி அரசுக்கு அளிப்பது என முடிவு செய்யப்பட்டது. முடிவில் வட்ட செயலாளர் ரேவதி நன்றி கூறினார்.

Related Stories: