டூவீலர் பாறையில் மோதி 2 தொழிலாளர்கள் பலி

போடி அருகே, டொம்புச்சேரி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் மாரிமுத்து (35), காளியப்பன் (55), பழனிச்சாமி (60). மூவரும் போடிமெட்டு அருகே, கேரள மாநிலம், பியல்ராம் பகுதியில் உள்ள ஏலத்தோட்டத்திற்கு டூவீலரில் வேலைக்கு சென்று திரும்புவது வழக்கம். நேற்று மூவரும் ஏலத்தோட்டத்தில் வேலையை முடித்து விட்டு, ஒரே டூவீலரில் ஊருக்கு போடிமெட்டு சாலை வழியாக திரும்பிக் கொண்டிருந்தனர். மலையடிவாரப் பகுதியில் முதல் கொண்டை ஊசி வளைவில் வேகமாக திரும்பியபோது, எதிர்பாராதவிதமாக கட்டுப்பாட்டை இழந்த டூவீலர் பாறையில் மோதி மூவரும் தூக்கி வீசப்பட்டனர்.

இதில் பழனிச்சாமி படுகாயம் அடைந்தார். காளியப்பன் சம்பவ இடத்திலே இறந்தார். மாரிமுத்து லேசான காயத்துடன் தப்பினார். சம்பவ இடத்துக்கு வந்த குரங்கணி போலீசார் காளியப்பன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காகவும், பழனிச்சாமி, மாரிமுத்து ஆகியோரை போடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக பழனிச்சாமியை தேனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர் செல்லும் வழியில் இறந்தார். மாரிமுத்து போடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து குரங்கணி போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: