மாவட்ட டேக்வாண்டோ சாம்பியன்ஷிப் போட்டி

மதுரை, பிப். 10:  மதுரை தனியார் பள்ளியில் மாவட்ட டேக்வாண்டோ சாம்பியன்ஷிப் போட்டிகள் நடந்தன. இதில் மொத்தம் 14 பள்ளிகளை சேர்ந்த சுமார் 300 மாணவர்கள் பங்கு பெற்றனர். பூம்சே, க்யூருகி ஆகிய இரு பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றது. இதில் மதுரை டேக்வாண்டோ அகாடமியை சேர்ந்த மாணவர்கள் 18 தங்கப்பதக்கம், 11 வெள்ளி பதக்கம், 5 வெண்கல பதக்கம் வென்று, ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் கோப்பையை கைப்பற்றினர்.

மாணவர்கள் ஸ்ரீஹரி, நித்திஷ், அர்தியக்ஸ், முத்து பிரசன்னா உள்ளிட்டோர் தங்கம் வென்றனர். ராமகிருஷ்ணன், வெங்கடேசன், வினோத் குமார் உள்ளிட்டோர் வெள்ளி  பதக்கம் வென்றனர். தனஸ்ரீ, ரூபகுமார் உள்ளிட்டோர் வெண்கல பதக்கம் வென்றனர். வெற்றி பெற்ற மாணவர்களை மதுரை டேக்வாண்டோ அகாடமி தலைமை பயிற்சியாளர் மாஸ்டர் நாராயணன் பாராட்டினார்.

Related Stories: