ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறை, பிப். 10: மயிலாடுதுறை கலெக்டர் அலுவலகம் முன் ஜாக்டோ- ஜியோ அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். பல்கலைக்கழக ஆசிரியர் சங்க பொருப்பாளர் கோபாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். முதுகலை பட்டதாரி கழக மாவட்ட செயலாளர் கலைவாணன் முன்னிலை வகித்தனர். புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். 21 மாத நிலுவை தொகையை உடனே வழங்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டது. அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் நடராஜன், தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற மாநில வெளியீட்டாளர் ஜெகமணிவாசகம், மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் சங்க மாவட்ட செயலாளர் லீலாவதி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Related Stories: