கரூர், பிப். 10: கரூர் ராயனூர் தாந்தோணிமலை சாலையில் புதிதாக கட்டப்பட்டுள்ள வடிகாலில் உடைப்பு ஏற்பட்டு திரும்பவும் கழிவுநீர் வெளியேறுவதால் சுகாதார சீர்கேடு உருவாகியுள்ளது. கரூர் ராயனூர் நான்கு ரோடு பகுதியில் இருந்து தாந்தோணிமலை குறிஞ்சி நகர் வரை இலங்கை தமிழர்கள் முகாம் பகுதியை ஒட்டி சாக்கடை வடிகால் அமைக்கும் பணி தற்போது வரை நடைபெற்று வருகிறது. இலங்கை தமிழர்கள் முகாம் சுற்றுச்சுவரை ஒட்டி வடிகால் அமைக்கும் பணி முடிவுற்று வெங்கடேஷ்வரா பகுதியில் தற்போது வாய்க்கால் வடிகால் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்நிலையில், வாய்க்கால் அமைக்கப்பட்டு, மண் பரப்பிய நிலையில், திரும்பவும் உடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் வெளியேறிய நிலையில் உள்ளது.