மதுரை: தமிழ்நாட்டின் வளர்ச்சிப் பயணத்துக்கு தலை வணங்குகிறேன் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். 15 ஆண்டுகளில் இந்திய ரயில்வே பெரும் வளர்ச்சி அடைந்துள்ளது. தமிழ்நாட்டில் 2024 முதல் 4,000 கி.மீ தொலைவுக்கு தேசிய நெடுஞ்சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. கடந்த 12 ஆண்டுகளாக நெடுஞ்சாலை வளர்ச்சிகளில் அதிக முதலீடுகளை செய்துள்ளோம்.
