கவுஹாத்தி: அசாமில் மேற்கொள்ளப்பட்ட இரண்டு அதிரடி நடவடிக்கைகளில் மொத்தம் ரூ.5.93கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும். இது தொடர்பாக மூன்று பேர் கைது செய்யப்பட்டதாகவும் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார். காம்ரூப் மாவட்டத்தின் கவுஹாத்தி மற்றும் ஸ்ரீபூமி மாவட்டத்தில் உள்ள பதர்கண்டியிலும் நடந்த நடவடிக்கைகளில் 83399 யாபா மாத்திரைகள் மற்றும் 10கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. யாபா மாத்திரைகளில் மெத்தம்பேட்டமைன் போதைப்பொருள் இருப்பதால் இந்தியாவில் அவை சட்டவிரோதமானவை.
