பூதலூர் அருகே ஆட்டை கடத்தி கொன்ற 3 நபர்கள் கைது

திருக்காட்டுப்பள்ளி, பிப்.9: தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் அருகே ரூ.15 ஆயிரம் மதிப்புள்ள ஆட்டை கடத்தி கொன்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர். பூதலூர் அருகே பொன்விளைந்தான்பட்டியை சேர்ந்தவர் தங்கமுத்து(55). இவர் விவசாயம் சார்ந்த ஆடு வளரப்பும் செய்து வருகிறார். நேற்றுமுன்தினம் (7ம் தேதி) தனது ஆடுகளை சோழகம்பட்டி வாரிவாய்க்கால் அருகே மேயவிட்டிருந்தார். மதியம் ஒரு ஆட்டை 3 பேர் கடத்தி செல்வதை பார்த்த அப்பகுதி மக்கள் அவர்களை துரத்தி பிடித்தனர். இதற்குள் மூவரும் கையில் வைத்திருந்த கத்தியால் ஆட்டின் கழுத்தில் குத்தியதால் ஆடு துடி துடித்து இறந்தது. இறந்த ஆட்டுடன் பிடிப்பட்ட சோழகம்பட்டி பெரியசாமி மகன் சுந்தர்(24), தமிழ்ச்செல்வன் மகன் தினகரன்(33) மற்றும் செல்லதுரை(29) மூவரையும் பூதலூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இது குறித்து தங்கமுத்து சப்இன்ஸ்பெக்டர் சார்லிமென்னிடம் அளித்த புகாரின்பேரில் 3 பேரையும் கைது செய்தார். இறந்த ஆட்டின் மதிப்பு ரூ.15ஆயிரமாகும்.

Related Stories: