இதேபோல் எட்டு மாதங்களுக்கு பிறகு நேற்று (8ம்தேதி) முதல் ஒன்பதாம் வகுப்பு, பதினொன்றாம் வகுப்பு மாணவர்களுக்காக வகுப்புகள் தொடங்கி உள்ளன. இதன்படி பெரம்பலூர் மாவட்டத்தில் அரசுப் பள்ளிகள், அரசு நிதிஉதவிபெறும் பள்ளிகள், மெட்ரிக் மற்றும் சுயநிதி பள்ளிகள் சிபிஎஸ்இ பள்ளிகள் என 149 பள்ளிகளைச் சேர்ந்த 4,393 மா ணவர்கள், 3,863 மாணவிகள் எனமொத்தம் 8,256 மாணவ, மாணவியர் பயிலும் 9ம்வகுப்பும், 3,237 மாணவர் கள், 3,871 மாணவிகள் என மொத்தம் 7,108 மாணவ, மாணவியர் பயிலும் 11ம் வகுப்பும் திறக்கப்பட்டன.