மயிலாடுதுறை, பிப். 9: புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து விட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை தொடர வேண்டும். ஆந்திர முதல்வர் துணிச்சலாக அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அளிக்க நடவடிக்கை எடுத்துள்ளார் அதேபோன்று தமிழகத்திலும் அளிக்க வேண்டும். தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதியை அதிமுக அரசு நிறைவேற்ற வலியுறுத்தி மயிலாடுதுறை கலெக்டர் அலுவலகம் முன் நேற்று 7வது நாளாக அரசு ஊழியர் சங்கத்தினர் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். அரசு ஊழியர்கள் சங்கத்தினர் மாவட்ட தலைவர் இளவரசு தலைமை வகித்தார். இதில் 50க்கும் மேற்பட்டோர் மாநில அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பினர். இதையடுத்து மறியலில் ஈடுபட்ட 30 பெண்கள் உட்பட 50 பேரை மயிலாடுதுறை போலீசார் குண்டுக்கட்டாக தூக்கி சென்று கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர்.