க.பரமத்தி, பிப்.9: தமிழகத்தில் விளை நிலங்கள் வழியாக உயர் மின் அழுத்த கோபுரங்கள் அமைப்பதற்கு பதிலாக சாலையோரமாக கேபிள் மூலமாக திட்டத்தை நிறைவேற்ற அரசு முயற்சி எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் தரப்பில் நீண்ட நாட்களாவே வலியுறுத்தப்பட்டு வருகிறது. இதனை மீறி பல்வேறு இடங்களில் தனியார் நிறுவனம் மூலம் புதிய உயர்மின் கோபுரம் அமைக்கும் பணிகளை செய்து வருகிறது. இந்நிலையில் க.பரமத்தி அருகே நெடுங்கூர் ஊராட்சி ரெங்கநாதபுரம் பகுதியில் சங்கீதா செந்தில்நாதன் (பாஜக) என்பவருக்கு சொந்தமான இடத்தில் சுமார் ஐந்தரை ஏக்கர் நிலத்தில் உயர்மின் கோபுரம் அமைக்க தனியார் நிறுவனத்தார் டவர்லைன் அமைக்கும் பணிக்கு அவ்விடத்தில் வேலை செய்ய மதுரை உயர்நீதி மன்ற கிளை ஆணை பெற்றதுடன் கரூர் கலெக்டரின் அனுமதியுடன் நேற்று வேலை செய்ய முயன்றபோது செந்தில்நாதன் மற்றும் அவரது கட்சி ஆதரவளர்களுடன் பணிகள் தொடங்க எதிர்ப்பு தெரிவித்து நிலத்தின் முன் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். முற்றுகை போராட்டம் குறித்து தகவலறிந்து வந்த அதிகாரிகள் ஆர்டிஓ பாலசுப்பிரமணியம், டிஎஸ்பி ரவிச்சந்திரன், இன்பெக்டர் ரமாதேவி, எஸ்ஐக்கள் ரங்கநாதன், ராஜேந்திரன், தாசில்தார் (பொ) பன்னீர்செல்வம் ஆகியோர் பணிகளை தடுப்போரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.