மின்சாரம் தாக்கி எலெக்ட்ரீசியன் சாவு

ராஜபாளையம், பிப்.9:  ராஜபாளையம் அருகே மம்சாபுரம் பகுதியைச் சேர்ந்த எலக்ட்ரீசியன் ஈஸ்வரன்(45). எலெக்ட்ரீசியன். மனைவி, 2 குழந்தைகள் உள்ளனர். இவர் தெற்கு வெங்காநல்லூர் பஞ்சாயத்து  மின் மோட்டாரை பழுது பார்க்கும் பணியில் ஈடுபட்டார். அப்போது மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து ராஜபாளையம் தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories: