திருத்துறைப்பூண்டி,பிப்.26: திருத்துறைப்பூண்டியில் தீயணைப்பு துறை வீரர்களுக்கு பயிற்சி வகுப்பு நடந்தது. சென்னை தீயனைப்பு மீட்பு பணிகள் இயக்குனர் சீமா அகர்வால் ஆணையின்படியும் திருச்சி மத்திய மண்டல துணை இயக்குனர் முரளி உத்தரவின் படியும் திருவாரூர் மாவட்ட அலுவலர் ஹக்கீம் பாட்ஷா வழிகாட்டுதலின்படியும் திருத்துறைப்பூண்டி தீயணைப்பு நிலைய அலுவலர் நடராஜன் தலைமையில் தீயணைப்புத் துறையின் நிலையான இயக்கக நடைமுறைகள் பற்றிய வகுப்புகள் ஒரு வார காலமாக நடைபெற்று வருகிறது, இதில் அனைத்து தீயனைப்பு வீரர்கள் கலந்து கொண்டனர்.
