இலவச பயிற்சி முகாம்

ஒட்டன்சத்திரம், பிப்.9: ஒட்டன்சத்திரம் அருகே உள்ள கொல்லபட்டியில் இரண்டாம் கட்டமாக கல்லூரி மாணவர்கள் அரசு வேலை வாய்ப்பில் பங்கேற்க, தயாராகுவது, நேர்முக தேர்வில் கலந்துகொண்டு வெற்றி பெறுவது குறித்த பயிற்சி முகாம் நடைபெற்றது. பயிற்சிகளை தலைமை ஆசிரியர் ஆறுமுகம், ஜெகதீஸ்வர தங்கவேல் உள்ளிட்டோர் அளித்தனர்.இந்த பயிற்சி குறித்து ஒருங்கிணைப்பாளர் வெங்கடேசஓம்கார் கூறுகையில், வரும் காலகட்டங்களில் வீட்டிற்கு ஒருவர் அரசு அதிகாரியாக வேண்டும் என்ற நோக்கில் மதிய உணவு உள்ளிட்ட தேவைகளை ஏற்படுத்திக்கொடுத்து, இப்பயிற்சிகளை அளித்து வருகிறோம். ஒட்டன்சத்திரம் பகுதிகளைச் சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணவிகள் கலந்துகொள்ளலாம் என்றார்.

Related Stories: