திண்டுக்கல்/பழநி, பிப்.9: திண்டுக்கல் மாவட்டத்தில் 11 மாதங்களுக்கு பிறகு நேற்று 9, 11ம் வகுப்புகள், கல்லூரிகள் திறக்கப்பட்டன. மாணவர்கள் வெப்ப பரிசோதனைக்கு பிறகு அனுமதிக்கப்பட்டனர்.
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதத்தில் தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகளும் கல்லூரிகளும் மூடப்பட்டன. வைரஸ் தொற்று குறைவின் காரணமாக மீண்டும் பள்ளிகளை திறக்க தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்படி கடந்த மாதம் 18ம் தேதி 10 மற்றும் 12ம் வகுப்புகள் துவங்கின. இதனிடையே நேற்று 9 மற்றும் 11ம் வகுப்புகள், கல்லூரியின் முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் துவங்கின.