வாலாஜாபாத்: வாலாஜாபாத் தாலுகா அலுவலகம் பேருந்து நிலையம் அருகாமையில் உள்ளது. இந்த அலுவலகத்திற்கு நாள்தோறும் நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்கள் சார்ந்த மக்கள் வீட்டு மனைபட்டா, முதியோர் உதவித்தொகை, புதிய குடும்ப அட்டை, குடும்பஅட்டையில் பெயர் சேர்த்தல் நீக்கல், உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக மனு அளிப்பதற்காகவும் அதிகாரிகளை சந்திப்பதாகவும் நாள்தோறும் வந்து செல்கின்றனர். ஒரு சில நேரங்களில் அதிகாரிகளை சந்திக்க காலதாமதம் ஆகும் நிலையில் அலுவலகத்தில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. இங்கு அடிப்படை வசதிகள் எதுவும இல்லாததால் பொதுமக்கள் காத்திருக்கும் போது மிகவும் சிரமப்படுகின்றனர்.