நாகை, பிப். 5: நாகை அருகே ரேஷன் கடையில் தரமற்ற அரிசி விநியோகம் செய்யப்படுவதாக மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளில் விலையில்லா அரிசி 20 கிலோ வழங்கப்படுகிறது. இவ்வாறு வழங்கப்படும் அரிசி தரமற்று இருப்பதாக புகார்கள் வருகிறது. இந்நிலையில் நாகை அருகே தெற்கு பொய்கைநல்லூரில் உள்ள ரேஷன் கடையில் வழங்கப்பட்ட விலையில்லா அரிசியில் புழுக்கள் இருப்பதால் அப்பகுதி மக்கள் அதை பயன்படுத்த முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதனால் அரிசி நிறம் மங்கி துர்நாற்றத்துடன் காணப்படுகிறது. பூசனம் பிடித்து வண்டுகள் நிரம்பிய நிலையில் விலையில்லா அரிசி விநியோகம் செய்யப்படுகிறது.