சென்னை: எனக்கு தரப்பட்ட பொறுப்பை மிக சிறப்பாக செய்துள்ளேன் என சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றியுள்ளார். வரலாற்று சிறப்புமிக்க இந்த இருக்கையில் எனக்கு முன் இருந்த பலரும் இன்று இல்லாவிட்டாலும் அவர்கள் அனைவரும் போற்றப்படக்கூடியவர்கள். பொறுமை, நிதானம், சகிப்புத்தன்மை, எதையும் தாங்கும் வல்லமை, கடமை தவறாமை ஆகிய பண்புகளை நானும் கடைபிடித்திருக்கிறேன் என்று கூறியுள்ளார்.
