அரசு ஊழியர்கள் 3வது நாளாக முற்றுகை போராட்டம்

கோவை, பிப்.5:  தமிழகத்தில் 4.5 லட்சம்   காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். அங்கன்வாடி, சத்துணவு, வருவாய், கிராம  உதவியாளர்கள், எம்ஆர்பி செவிலியர்கள் 3.5 லட்சம் பேருக்கு  காலமுறை ஊதியம்  வழங்க வேண்டும். இளைஞர்களின் வேலை வாய்ப்பைப் பறிக்கும் ஆதிசேஷையா குழுவின்  பரிந்துரையை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் தமிழகம் முழுவதும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு அரசு ஊழியர்கள் முற்றுகை போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களது போராட்டம் நேற்று 3ம் நாளாக நடந்தது. அரசு ஊழியர்கள் தரையில் அமர்ந்து முற்றுகையில் ஈடுபட்டு கோஷமிட்டனர். போராட்டம் செய்த 100க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் கைது செய்யப்பட்டனர்.

Related Stories: